ஆசீர்வாதங்கள் அன்று போதும் - Aaseervaathangal Antru Poothum
ஆசீர்வாதங்கள் அன்று போதும்
ஆண்டவர் இன்று போதும் வாஞ்சித்தேன் வெளி உணர்ச்சிகள்
இன்று வசனமே போதும்
வரங்கள் நாடி ஓடினேன்
இன்று வரந்தருவோன் போதும்
வியாதி நீங்க தேடினேன்
இன்று வைத்தியர் இயேசுவே போதும்
என்றென்றும் கிறிஸ்துவே
இயேசுவையே பாடுவேன்
எல்லாவற்றிலும் கிறிஸ்துவே
எனக்கெல்லாம் அவரே
நானாகவே போராடினேன்
இன்று நல்லவரை நம்புகிறேன்
அரைகுறையாய் ஏற்றுக்கொண்டேன்
இன்று அதிகமாயண்டிக் கொண்டேன்
தொடர்ந்து உலகைப் பற்றிக்கொண்டேன்
இன்று அவரே பிடித்துக் கொண்டார்
அலைபாய்ந்த என் வாழ்க்கையில்
அசையா நங்கூரமானார்
துரிதமான என் திட்டங்கள் தொலைந்து
இன்று நம்பி ஜெபிக்கிறேன்
எனது கவலை கலக்கம் எல்லாம்
இன்றவர் ஏற்றுக் கொண்டார்
என் விருப்பமே விழைந்திட்டேன்
இன்றவர் சொல்வதே என் விருப்பம்
விடாப்பிடியாய் கேட்டுக் கொண்டேன்
இன்று விடாமல் துதிக்கிறேன்
என் வேலையே என் விருப்பம்
இனி எல்லாம் அவர் விருப்பம்
அன்று அவரை உபயோகித்தேன்
இன்றென்ன்னப் பயன்படுத்துகிறார்
முன்பு வல்லமை வாஞ்சித்தேன்
அவ்வல்லவர் இன்று போதும்
நானாகவே உழைத்திடேன்
இன்று இயேசுவுக்காகவே
அன்று இயேசுவை நம்பினேன்
இன்றென்னுடையவரே
முன்பென் வெளிச்சம் மங்கியது
இன்றோ பிரகாசிக்கிறது
முன்பு சாவுக்காய் காத்திருந்தேன்
இன்றவர் வருகையை எதிர்ப்பார்க்கிறேன்
என் நம்பிக்கைகள் அவரெல்லைக்குள்
நங்கூரப்பட்டுள்ளது