பூவைப்போல உதிர்ந்திடும் | Lyrics Christian Song

 பூவைப்போல உதிர்ந்திடும் 

புல்லைப் போல உலர்ந்திடும்

(இந்தப்) பூமியின் நாளெல்லாம் (2)


என் தேவையே நீர் தானே!

என் தேவையெல்லாம் இயேசு தானே!

என் தேவையெல்லாம் இயேசு தானே! (2)


⁠(பாவ) இருள் சூழ்ந்த உலகத்திலே 

என்னைப் பிரகாசிக்கும் ஒளியே! (2) 

எனக்குள்ளே வந்தென்னை இரட்சித்திடும் 

ஜீவன் இயேசுதானே! (2) - என் தேவையே


அநித்திய பாவ சந்தோஷம் 

அது அடிமையாக்கிடுமே (2)

நித்திய சந்தோஷம் இயேசு தானே! 

விடுதலை தருபவரே! (2) - என் தேவையே


(என்னை) ⁠வழுவாமல் காப்பவரே! 

உம் மகிமையின் திருமுன்னே! (2)

(என்னை) மகிழ்ச்சியோடே மாசற்றோனாய் 

நிறுத்திட வல்லவரே! (2) - என் தேவையே


பூவைப்போல உதிர்ந்திடும் 

புல்லைப் போல உலர்ந்திடும்

(இந்தப்) பூமியின் நாளெல்லாம் (2)




கருத்துரையிடுக

0 கருத்துகள்