Karththarai thudhiyungal | கர்த்தரை துதியுங்கள் Lyrics
கர்த்தரை துதியுங்கள்
கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்,
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றிப் புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் (2)
பகலை ஆள்வதற்கு,
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உருவாக்கினார்
செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச்செய்தார்
பார்வோனையும் படைகளையும்
அதிலே மூழ்கடித்தார்
வனாந்திரப் பாதையில்,
ஜனங்களை நடத்திச் சென்றார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக்கொண்டார்
தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
உடல் கொண்ட அனைவருக்கும்
உணவு ஊட்டுகிறார்.
Karththarai thudhiyungal
Avar endrum nallavar
Avar peranbu endrum ulladhu
Oruvaraai maaperum
Adhisayangal seydhaare
Vaanangalai gnaanamaai
Undaakki magizhndhaare
Indru potri pugazhuvom
Naam uyarththi magizhuvom (2)
Pagalai aalvadharku
Kathiravanai uruvaakkinaar
Iravai aalvadharku
Chandhiranai uruvaakkinaar
Sengadalai irandaaga
Piriththu nadakkach seydhaar
Paarvonaiyum padaigalaiyum
Adhile moozhkadiththaar
Vanaandhira paadhaiyil
Janangalai nadaththich sendraar
Ethiriyin kaiyinindru
Viduviththuk kaaththukkondaar
Thaazhmaiyil irundha
Nammaiyellaam ninaivukoorndhaar
Udal konda anaivarukkum
Unavu oottugiraar
உரையாடலில் சேர்