Paaduven magizhven | பாடுவேன் மகிழ்வேன் Lyrics
பாடுவேன் மகிழ்வேன்
பாடுவேன் மகிழ்வேன்
கொண்டாடுவேன்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவேன்
அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே
நன்றி நன்றி நன்றி
துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
பிரியமும் நீர்தானையா என்
கல்வாரி சிலுவையினால் என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்குக் கிடைத்ததையா
இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதி மானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து உம்
அன்பை ஊற்றினீரே
உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் என்
உயிரான கிறிஸ்து வந்ததால் உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்
இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா உம்
மிகுந்த இரக்கத்தினால்
வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே கடும்
வெயிலில் குளிர் நிழலே
பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு அது
எத்தனை மேலானது
Paaduven magizhven
Kondaaduven
Appaa samoogaththil paadi
Magizhndhu kondaaduven
Akkini madhil Neere
Aarudhal mazhai Neere
Ikkattil thunai Neere
Irulil velichcham Neere
Nandri nandri nandri
Thuyar neekkum Maruththuvarae
En thudhikkup paaththirarE
Belanellaam Neerthaanaiyyaa
Piriyamum Neerthaanaiyyaa en
Kalvaari siluvaiyinaal en
Saabangal udaindhadhaiyyaa
Aabiragaamin aaseervaadhangal
Adimaikkuk kidaiththadhaiyyaa
Yesuve Um iraththaththaal
Ennai needhimaanai maatrineere
Parisuththa Aavi thandhu Um
Anbai oottrineere
Ummaiye nambi vaazhvadhAl
Umakke sondhamaanaen en
Uyiraana Kiristhu vandhadhaal Um
Uravukkul vandhuvitten
Ivvulagap pokkinpadi
Naan vaazhndhen pala naatkal
Ummodu inaiththeeraiyyaa Um
Migundha irakkaththinaal
Vaazhvu tharum oottru Neere
Vazhikaattum dheepam Neere
Puyalil pugalidame kadum
Veyilil kulir nizhale
Perinba neerodaiyil
En thaagam thanippavare
Umadhu peranbu adhu
Eththanai melaanadhu
உரையாடலில் சேர்