Iraivanai nambiyirukkiren | இறைவனை நம்பியிருக்கிறேன் Lyrics
இறைவனை நம்பியிருக்கிறேன்
Iraivanai nambiyirukkiren
இறைவனை நம்பியிருக்கிறேன்
எதற்கும் பயப்படேன்
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
பயம் என்னை ஆட்கொண்டால்
பாடுவேன் அதிகமாய்
திருவசனம் தியானம் செய்து
ஜெயமெடுப்பேன் நிச்சயமாய்
அச்சம் மேற்கொள்ளாது
இறை அமைதி என்னை காக்கும்
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
என் சார்பில் இருக்கின்றீர்
என்பதை நான் அறிந்து கொண்டேன்
எதிராக செயல்படுவோர்
திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம்
சாவினின்று என் உயிரை
மீட்டீரே கிருபையினால்
உம்மோடு நடந்திடுவேன்
உயிர்வாழும் நாட்களெல்லாம்
துயரங்களின் எண்ணிக்கையை
கணக்கெடுக்கும் தகப்பன் நீர் என்
கண்ணீரைத் தோற்பையில்
சேர்த்து வைத்துப் பதில் தருவீர்
மறக்கவில்லை என் பொருத்தனைகள்
செலுத்துகிறேன் நன்றி பலி
காலடிகள் இடறாமல்
காத்தீரே நன்றி ஐயா
Tanglish Lyrics
Iraivanai nambiyirukkiren
Edharkkum bayappadaen
Ivvulagam enakkedhiraai
Enna seiyya mudiyum
Bayam ennai aadkondaal
Paaduven adhigamaai
Thiruvasanam dhiyanam seydhu
Jeyameduppen nichchayamaai
Achcham merkollaadhu
Irai amaidhi ennai kaakkum
Ivvulagam enakkedhiraai
Enna seiyya mudiyum
En saarpil irukkindreer
Enbadhai naan arindhu konden
Edhiraaga seyalpaduvor
Thirumbuvaargal pinnittu
Saavinindru en uyirai
Meetteere kirubaiyinaal
Ummodu nadandhiduven
Uyirvaazhum naatkalellaam
Thuyarangalin ennikkaiyai
Kanakkedukkum Thagappan neer en
Kanneerai thorpaiyil
Serththu vaiththu badhil tharuveer
Marakkavillai en poruththanaigal
Seluthugiren nandri bali
Kaaladigal idaraamal
Kaaththeere nandri Aiyya
உரையாடலில் சேர்