Unnadhamaanavar Maraivinile | உன்னதமானவர் மறைவினிலே Lyrics
உன்னதமானவர் மறைவினிலே
உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழல்தனிலே
தங்கி உறவாடி மகிழ்கின்றேன்
எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்
ஆண்டவர் எனது அடைக்கலமானார்
நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்
வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள்
தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்
தமது சிறகால் அரவணைக்கின்றார்
இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்
சத்திய வசனம் எனது கேடகம்
நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு
என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்
பதினாயிரம் பேர் தாக்கினாலும்
பாதுகாப்பவர் என் பக்கத்திலே
பாதிப்பு இல்லையே பயமில்லையே
செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்க
தமது தூதருக்கு கட்டளையிட்டார்
பாதம் கல்லிலே மோதாமலே
கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்
சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன்
சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்
சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்
Unnadhamaanavar Maraivinile
Sarva Vallavar Nizhal Thanile
Thangi Uravaadi Magizhgindren
Engum Vetri Naan Kaangindren
1. Aandavar Enadhu Adaikkalamaanaar
Naan Nambum Kottaiyum Aranumaanar
Vedar Kannigal Kollai Noigal
Thappuviththu Kaappaatri Thaangugiraar
2. Thamathu Siragaal Aravanaikkindrar
Irakkaiyin Keezhe Amarach Seygindrar
Saththiya Vasanam Enadhu Kedagam
Nichchayam Nichchayam Viduthalai Undu
3. En Pakkam Aayiram Per Vizhundhaalum
Pathinaayiram Per Thaakkinaalum
Paadhugaappavar En Pakkaththile
Paathippu Illaiye Bayamillaiye
4. Sellum Idamellaam Ennaik Kaakka
Thamathu Thoodharukku Kattalaiyittaar
Paadham Kallile Modhaamale
Kaigalil Enthiduvaar Thaangiduvaar
5. Singaththin Meedhu Naan Nadandhiduven
Seerum Sarppangalai Mithiththiduven
Samaadhaanaththin Devan Seekkiramaai
Saaththaanai Kaaladiyil Nasukkiduvaar
உரையாடலில் சேர்