என்னை படைத்தவரே | Tamil Christian Song

என்னை படைத்தவரே

பெயர் சொல்லி அழைத்தவரே 

தாயின் கருவினிலே 

என்னையும் கண்டவரே 


நீ என்னுடையவன்(ள் )

நீ எனக்கு வேண்டுமென்று 

மீட்டுக்கு கொள்ளப்பட்டவன் ( ள் )


எங்கோ வாழ்ந்த என்னை நினைத்திட்டீரே 

வாலிப வயதினிலே அழைத்திட்டீரே 

உமது பொக்கிஷமாய்த் தெரிந்து கொண்டீர் 

பரிசுத்தமாய் வாழ பிரித்தெடுத்தீர் 


தாய் தன் பாலகனை மறந்திட்டாலும் 

என்னை ஒருபோதும் மறப்பதில்லை 

உள்ளங்ககையில் என்னை வரைந்து கொண்டீர் 

உயர்த்தும் காலத்தில் உயர்த்திடுவீர் 


வைராக்கிய வாஞ்சையாய் இருப்பவரே 

உலக சிநேகத்தையே வெறுப்பவரே 

உன் நேசம் எனக்குதான் என்பவரே 

தீமையை பொறுக்காத தூயவரே 


நான் உம்முடையவன் (ள்)

நான் உமக்கு வேண்டுமென்று 

மீட்டுக் கொள்ளப்பட்டவன் (ள் )

கருத்துரையிடுக

0 கருத்துகள்