En ul uruppugal undaakkiyavar | என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் Lyrics
என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர்
என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
நன்றி நவில்கின்றேன்
நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா
அமர்வதையும் எழுவதையும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்களை என் ஏக்கங்களை – என் (2)
எல்லாமே அறிந்திருக்கின்றீர் -அப்பா
உம்மை விட்டு மறைவாக
எங்கே நான் ஓட முடியும்
உம் சமூகம் இல்லாமலே
எங்கே வாழ முடியும் – அப்பா
உம்மை வருத்தும் காரியங்கள்
இல்லாமல் அகற்றி விடும்
நித்தியமான உம் பாதையில்
நித்தமும் நடத்துமையா
நடப்பதையும் படுப்பதையும் நன்கு
நீர் அறிந்திருக்கின்றீர்
என் வழிகள் என் செயல்கள்
உமக்குத் தெரியும் அன்றோ
என் முன்னும் என் பின்னும்
சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர்
பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே
முற்றிலும் அதிசயமே
En ul uruppugal undaakkiyavar neerthaane
Thaayin karuvil uruth thandhavar neerthaane
Viyaththagu muraiyil ennaip padaitheere
Nandri navilgindren
Nandri umakku nandri (2) – Appa
Amarvadhaiyum ezhuvadhaiyum
Appa neer arindhirukkindreer
Ennangalai en yekkangalai – en (2)
Ellaame arindhirukkindreer – Appa
Ummai vittu maraivaaga
Enge naan oda mudiyum
Um samoogam illaamale
Enge vaazha mudiyum – Appa
Ummai varuththum kaariyangal
Illaamal agatri vidum
Niththiyamaana um paadhaiyil
Niththamum nadaththumaiyaa
Nadappadhaiyum paduppadhaiyum nangu
Neer arindhirukkindreer
En vazhigal en seyalgal
Umakkuth theriyum andro
En munnum en pinnum
Suttrich soozhndhu irukkindreer
Pattrip pidikkindreer um karaththaale
Mutrilum athisayame
உரையாடலில் சேர்