Nambikkaiyinaal nee vaazhvu peruvaai | நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் Lyrics
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார்
1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய்
2. ஆடையை தொட்டால் நலம்பெறுவேனே
அறிக்கை செய்து சுகமடைந்தாள்
ஒருத்துளி சந்தேகமில்லாமலே
ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்
3. ஆபிரகாம் சாராள் குழந்தைப்பெற
ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்
வாக்குதத்தம் செய்தவர் நம்பதக்கவர்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்
4. கட்டாந்தரையிலே நடப்பது போல்
கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்
எரிகோ மதில்கள் விழுந்தனவே
ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்
5. உலகிலே இருக்கும் அவனை விட
உனக்குள் இருப்பவர் பெரியவரே
துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
துரிதமாய் வெற்றி காணச் செய்வார்
6. மலையைப் பார்த்து கடலில் விழு
என்று சொன்னால் நடந்திடுமே
உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
நம்பினால் எல்லாம் நடந்திடுமே
Nambikkaiyinaal nee vaazhvu peruvaai
Nanbane nee bayappadaadhe
Bayam vendaam thigil vendaam
Padaiththavar unnai nadaththich selvaar
1. Adhisayak Kalvaari siluvaiyile
Anaiththaiyum seydhu mudiththuvittaar
Thazhumbugalaal nee sugamaanaai
Thayavinaal marupadi pirandhuvittaai
2. Aadaiyai thottaal nalam peruvene
Arikkai seydhu sugamadaindhaal
Oruththuli sandhegamillaamale
Odivaa Yesu indru sugam tharuvaar
3. Aabiragaam Saaraal kuzhandhai pera
Aatral petradhu nambikkaiyinaal
Vaakkuththatham seydhavar nambaththakkavar
Ekkamellaam eppadiyum niraivetruvaar
4. Kattaantharaiyile nadappadhu pol
Kadalai kadandhanar nambikkaiyinaal
Eriko madhilgal vizhundhanave
Ezhunaal oorvalam vandhadhinaal
5. Ulagile irukkum avanai vida
Unakkul iruppavar periyavare
Thunai nindru unakkaai yuththam seyvaar
Thuridhamaai vetri kaanach seyvaar
6. Malaiyaip paarththu kadalil vizhu
Endru sonnaal nadandhidume
Unnaale koodaadhadhu ondrumillaiye
Nambinaal ellaam nadandhidume
உரையாடலில் சேர்