உன் வாழ்வின் இலக்கு எதுவென்று நீயும்
ஒரு முறைதான் சிந்திப்பாயா?
இந்நாளில் நேசர் இயேசுவுக்கே உன்
இதயத்தை சமர்ப்பிப்பாயா ?
உன் தாயின் கருவில் உருவாகும்போதே
அவர் கண்கள் உனைக் கண்டதே!
ஆச்சர்யமாக உன்னைத் கண்டதே
படைத்தாரே யோசிப்பாயா?
உனக்குள் வாசிக்க ஒவ்வொரு நாளும்
கரம் நீட்டிக் காத்துள்ளாரே!
இயேசு வந்துனக்குள் உறவாட இதயக்
கதவை நீ திறந்திடாயோ ?
அவர் கரத்தினின்று பாய்ந்ததோடும் இரத்தம்
உனக்காக சிந்தினாரே!
அவர் பட்டபாடு ஒவ்வொன்றும் உனக்கே
அதை சற்று சிந்திப்பாயா?
இயேசு வந்துன்னை சந்திக்கும் தருணம்
இப்போதென் றறிந்திடாயோ
இயேசுவை உன்னில் ஏற்றுக்கொள்ளாமல்
கடந்து செல்லாதே நீ வா
0 கருத்துகள்