Vaikaraiyil Umakkaaga | வைகறையில் உமக்காக Lyrics
வைகறையில் உமக்காக
வைகறையில் உமக்காக
வழி மேல் விழி வைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்
உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்
ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கும் நீர்தானய்யா
படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்
என் இதயம் பூரித்து துள்ளுகின்றது
என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது
காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என் முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்
Vaikaraiyil Umakkaaga
Vazhi mel vizhi vaiththu
Kaaththirukkindren Iraivaa
En jebam ketu pathil thaarum
Perumoochaip paarththu manam irangum
Verse 1
Um illam vandhen Um kirubaiyinaal
Bayabakthiyodu panindhu konden
Niraivaana magizhchi Um samoogaththil
Kuraiyillaadha perinbam Um paadhaththil
Verse 2
Aatchi seyyum aalunar Neerthaanaiyyaa
Ummaiyanri veru oru selvam illaiye
Neerthaane enadhu urimaich soththu
Enakkuriya pangum Neerthaanaiyyaa
Verse 3
Padukuzhiyil paadhaalaththil vidamaatteer
Azhindhu poga anumathiyum tharamaatteer
En idhayam pooriththu thullugindrathu
En udalum paadhugaappil ilaippaarudhu
Verse 4
Kaalai thorum thirupthiyaakkum Um kirubaiyaal
Naalellaam kalikoorndhu magizhndhiruppen
Eppodhum en munne Neerthaanaiyyaa
Orupodhum asaivura vidamaatteer
உரையாடலில் சேர்